சென்னையில் மட்டுமல்ல, சர்வதேச சந்தையிலும் இன்று தங்கம் விலை இறங்குமுகத்தில்தான் உள்ளது. இதை தாண்டி, நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று - நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 12), சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 4,400 டாலர் தாண்டியிருந்தது. பொருளாதார நிபுணர்களின் பார்வையில், இது முக்கியமான லெவலாக பார்க்கப்பட்டது. இதற்கு காரணம், ஈரான் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தங்கம் விலை 3,900 டாலருக்குக் கீழ் சென்றதுதான். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்Tata Sons-ன் அடுத்த தலைவர் 'இவரா?' - அடிபடும் பேச்சுகள்; தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்? தங்கம் விலை 'இந்த' விலையைத் தாண்டினால்தான் அடுத்த ஏற்றம் என்று ஒரு ரெசிஸ்டென்ஸ் லெவலைக் குறிப்பிடுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். "சர்வதேச சந்தையில் தங்கம் விலை சமீபத்தில் ஒரு அவுன்ஸிற்கு 4,400 டாலரைத் தாண்டியுள்ளது. அடுத்து நாம் கவனிக்க வேண்டிய லெவல் 4,484 டாலர். இது ஒரு முக்கியமான ரெசிஸ்டென்ஸ் லெவல். நேற்று முன்தினம் ஏறிய தங்கம் விலை, நேற்று குறைந்ததற்கான முக்கிய காரணம் - பிராபிட் டேக்கிங். ஆக, தங்கம் விலை அடுத்தடுத்த உச்சங்களைத் தொட வேண்டுமானால், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,484-ஐ தாண்ட வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/personal-finance/gold/gold-prices-slip-globally-will-4484-trigger-the-next-rally



