கொழும்பு, இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். மெண்டிஸ், 2026 லங்கா பிரீமியர் லீக்கில் ஏற்பட்ட தொடைத் தசை காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மெண்டிஸுக்கு பதிலாக சரித் அசலங்கா டி20அணியின் கேப்டனாக செயல்படுவார். வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோவும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயக்க, பினுராவுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் போட்டி செப்டம்பர் 15 அன்று சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. அடுத்த போட்டிகள் செப்டம்பர் 17 அன்று கார்டிப் மற்றும் செப்டம்பர் 19 அன்று மான்செஸ்டரில் நடைபெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/england-t20-series-kusal-mendis-withdraws




