டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி வருகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசிய போது அவருக்கு திருக்குறள் புத்தகம் ஒன்றை பரிசாக நரேந்திர மோடி வழங்கினார். அந்த புத்தகம் தமிழ் மொழியில் இருந்து ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது. 1330 குறள்களை கொண்ட திருக்குறள் உலகம் முழுவதுமுள்ள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் - அடிக்கடி இந்நூலிலிருந்து மேற்கோள்களைக் குறிப்பிட்டு பேசுவதுண்டு. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரைகளின்போதும், ப. சிதம்பரம் பதவியில் இருந்தபோது ஆற்றிய உரைகளின்போதும் இந்நூலிலிருந்து கருத்துகளை மேற்கோள் காட்டியுள்ளனர். திருக்குறள் போருக்கான உத்திகள் குறித்த ஞானத்தை இப்புத்தகம் வழங்கினாலும், இது அமைதியின் சிறப்பையும் வலியுறுத்துகிறது. புடினுக்கு இப்புத்தகம் கொடுத்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தள பதிவில், "மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து, மகான் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத ஞானத்தை எடுத்துரைக்கும் திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை அதிபர் புடினிடம் வழங்கினேன்," என்று குறிப்பிட்டுள்ளார். மோடி அடிக்கடி வலியுறுத்தி வரும் 'மோதல்களைத் தவிர்க்க வேண்டும்' என்ற கொள்கைக்கு இது மிகவும் உகந்த புத்தகம் ஆகும். இதற்கு முன்பு நரேந்திர நோடி ரஷ்ய அதிரபரை சந்தித்து பேசும்போது, தற்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் புடினை வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புகள் வாயிலாக, பிற்காலத்தில் திருக்குறள் ரஷ்ய அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்தது. ரஷ்யாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான லியோ டால்ஸ்டாய், 19-ஆம் நூற்றாண்டில் வெளியான ஆரம்பகால மொழிபெயர்ப்பு ஒன்றின் வாயிலாகத் திருக்குறளை அறிந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அறம், கருணை மற்றும் அகிம்சை ஆகியவற்றுக்கு அது அளிக்கும் முக்கியத்துவம் அவரது தத்துவார்த்த எழுத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தனது 2019 சுதந்திர தின உரையின் போது, ஜல் ஜீவன் இயக்கத்தை அறிவிக்கும் போது, திருவள்ளுவரின் “நீர் இன்றி அமையாது உலகம்”, என்பதை மேற்கோள் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/trending/prime-minister-narendra-modi-presented-the-thirukkural-as-a-gift-to-russian-president-putin-who-arrived-for-the-brics-summit



