இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் தனது காதலரும், நடிகருமான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார்கள். இது தவிர ஒரு புதிய படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கவும் செய்கிறார்கள். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், 'உங்கள் பளபளப்புக்கு என்ன காரணம்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு ராஷ்மிகா, "உள்ளம் அழகானால் மேனியும் அழகாகும். என்னதான் விதவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும், நமது ஆழ்மனம் தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் அழகாக தெரிவோம். இருக்கும் இந்த வாழ்க்கையில் நல்லதை செய்து வாழ வேண்டும். முடிந்த வரை நாம் செய்யும் நல்ல நிகழ்வுகள் நம் காலம் முடிந்த பிறகும் நம்மை பேச செய்யும்", என்றார். ராஷ்மிகாவின் இந்த பதில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/if-the-heart-is-beautiful-the-body-will-beautiful-rashmika-mandanna




