வாஷிங்டன், அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது. 3 பேர் பலி இந்த உணவகத்தில் நேற்று இரவு (அந்நாட்டு நேரப்படி) வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/shooting-in-america-3-killed




