கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. 4 பேர் பலி இந்நிலையில், மழையில் போது பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியது. அம்மாநிலத்தின் ஹவுரா மாவட்டம் ஜகத்பல்வபூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 4 பேரும் உயிரிழந்தனர். மேலும், மின்னல் தாக்கி 2 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/west-bengal-lightning-strike-kills-4




