புது தில்லி, உலகம் முழுவதும் உள்ள இசுலாமிய மக்கள் நபிகள் நாயகம் முஹம்மதுவின் பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் இன்று மிலாடி நபி திருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: புதன்கிழமை மிலாடி நபி நன்னாளை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த நாள் நம் அனைவரிடமும் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் வளர்க்கும் என்று நம்புகிறேன். நபிகள் நாயகம் முஹம்மது பிறந்த நாள் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. மிலாடி நபி வாழ்த்து "ஈத் முபாரக்! மிலாடி நபி நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாள் நம் அனைவரிடமும் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் வளர்க்கும் என்று நம்புகிறேன். கருணை மற்றும் சமூகத்திற்கு திருப்பி கொடுக்கும் மனப்பான்மை எப்போதும் நமக்கு வழிகாட்டட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/may-milad-e-nabi-bring-unity-and-happiness-to-all-pm-modi



