சென்னை, த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில், போலீசாரால் தேடப்படும் சிங்கப்பூர் தொழில் அதிபர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆட்சி கவிழ்ப்பு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசை கவிழ்ப்பதற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம், ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. இளையராஜா கொடுத்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீண்டும் கோர்ட்டில் ஆஜர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய 5 பேர் இந்த வழக்கில் மிக முக்கியமான குற்றவாளிகளாக கருதப்பட்டனர். அவர்கள் 5 பேரையும், போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள். சிங்கப்பூர் தொழில் அதிபர் கைதானவர்களுடன் சிங்கப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், அடிக்கடி செல்போனில் பேசியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோத ஹவாலா பண பரிமாற்றமும் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அந்த சிங்கப்பூர் தொழில் அதிபர் யார் என்று தெரியவந்துள்ளது. அவரது பெயர் லட்சுமண பெருமாள். சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் இவர், சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த தொடர்பின் மூலமாகவே குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த சிலர், லட்சுமண பெருமாளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களது ஆலோசனையின் பேரிலேயே த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக சிங்கப்பூரில் இருந்தபடியே லட்சுமண பெருமாள் சென்னையை சேர்ந்த நபர்களோடு போனில் பேசி இருக்கிறார். இவர் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பினாமியாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. 'லுக்-அவுட்' நோட்டீஸ் லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்தபடியே இந்த வழக்கு தொடர்பான முக்கியமான ஆதாரங்களை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தபோது அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். இந்த சிங்கப்பூர் தொழில் அதிபரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவரை பற்றி 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுத்து, விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஆஜராகும் செந்தில்பாலாஜி இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமாருக்கும் சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அவருக்கு பல்வேறு நிபந்தனைகளையும், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியும், அவரது தம்பியும் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்காக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-35-crore-deal-to-topple-tvk-government-who-is-the-singapore-based-businessman-sought-by-the-police-sensational-details-emerge




