சென்னை, பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறிப்பிட்ட காலத்திற்கு கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 12694/12693) தூத்துக்குடியில் இருந்து இன்று (ஆகஸ்ட் 4) முதல் ஆகஸ்ட் 30-ந்தேதி வரையும், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரையும் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. அதாவது, 5 பெட்டிகளில் இருந்து 6 பெட்டிகளாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-passengers-additional-coach-on-muthunagar-express




