துபாய், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சமீபத்திய மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேவேளையில், இந்திய அணியின் ஸ்ரீ சரணி முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். 8 விக்கெட்டுகள் தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தீப்தி சர்மா மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். இதில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 6-வது இடம் ஆசியக் கோப்பையில் வெளிப்படுத்தி வரும் சிறப்பான செயல்பாட்டின் மூலம் தீப்தி சர்மா மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் ஸ்ரீ சரணிஉள்ளார். தீப்தி சர்மா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/womens-t20-rankings-sri-sarani-retains-the-no-1-spot-deepti-sharma-moves-up-to-6th-place




