தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம்- I தீர்ப்பளித்துள்ளது. முன்விரோதத்தில் கொலை; 3 பேர் கைது தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மேலநாட்டார்குளம் பகுதியில் வைத்து செல்லையா மகன் குரு என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது மகன்களான மாசிலாமணி (வயது 34), துரை(36) மற்றும் குருநாதன் மகன் செல்லதுரை(54) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 பேருக்கு ஆயுள் தண்டனை இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று மாசிலாமணி, துரை மற்றும் செல்லதுரை ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-3-people-sentenced-to-life-imprisonment-in-murder-case




