ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள திம்மையன் புதூரைச் சேர்ந்தவர் வான்மதி. எளிமையான விவசாய குடும்பப் பின்னணியில் பிறந்த இவரின் தந்தை வாடகை கார் ஓட்டுநர். பள்ளி பருவத்தில் வறுமையில் தவித்த குடும்பத்திற்கு ஆதரவாக இருந்துகொண்டே கல்வியிலும் தீவிரமாக நாட்டம் செலுத்தி வந்திருக்கிறார் வான்மதி. சத்தியமங்கலம் அரசு மகளிர் பள்ளியில் சேர்ந்த இவர், பகலில் பள்ளிக்கூடம், மாலையில் ஆடு, மாடு மேய்க்கும் பணி என கடுமையாக உழைத்திருக்கிறார். பள்ளி படிப்பை முடித்த இவர், பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். வங்கிப் பணியில் சேர்ந்த இவர், கலெக்டர் கனவை நிறைவேற்றும் வகையில் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வந்திருக்கிறார். வான்மதி ஐ.ஏ.எஸ் விடாமுயற்சியுடன் படித்து 2015- ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 152-வது ரேங்க் பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தடம் பதித்திருக்கிறார். அரசு அதிகாரியாக நந்துர்பார், துலே மாவட்டங்களில் கிராமப்புற மேம்பாடு மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஊட்டச்சத்து திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வந்த இவர், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருகிறார். டிஜிட்டல் நிர்வாகம் மூலம் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கும் முறையை அறிமுகப்படுத்தி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்ததுடன், வறட்சி மிகுந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் "சாலா ஜனுய்ய நதியா" (Chala Januyya Nadila) போன்ற நதி புத்துயிர்ப்பு திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து சிறந்த கலெக்டராக கவனத்தை ஈர்த்து வருகிறார், இந்த ஈரோடு பெண்மணி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/gender/empowerment/erode-vanmathi-ias-struggle-and-success-story




