சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் பெடபரியா-நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரை (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதையொட்டி சில பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:- * சென்னை சென்டிரலில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப் பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.66039), சூலூர்பேட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் (66042) நாளை ரத்து செய்யப்படுகின்றன. * சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும் (66041), நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (66040) நாளை ரத்து செய்யப்படுகின்றன. * சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப் பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் (66003) நாளை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/five-passenger-trains-including-the-chennai-centralsulurpeta-service-have-been-cancelled




