அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வெப்ப அலை தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பாகக் கட்டடத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது. தென்மேற்குப் பருவமழை குறைவாக இருக்கும் சூழலில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்கவும், கால்நடைகள் மற்றும் விவசாயத்தைப் பாதுகாக்கவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளவும் மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளன. முதல்வர் விஜய் முதற்கட்டமாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில், ரூ. 55 கோடியில் புதிய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற வெப்ப மண்டல மாவட்டங்களுக்குத் தேவையான சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் பேரில் முதல்வர் முடிவெடுப்பார். மேகதாது அணை கட்டுவதற்குத் தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. ஆனால், காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு ஒரு செங்கல்கூட எடுத்து வைக்க அனுமதிக்காது. சென்னையில் நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து மழைநீர் வடிகால் பணிகளை அதிவேகமாக மேற்கொண்டு வருகின்றன. பருவமழை தொடங்குவதற்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடையும்" என்றார். ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாநில எல்லையில் பதற்றம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/sengottaiyan-has-stated-that-the-cm-will-not-allow-even-a-single-brick-to-be-laid-for-the-mekedatu-dam




