கோவை, கோவையில் ஐ.டி. என்ஜினீயரை காரில் கடத்திச் சென்று, நகை மற்றும் பணத்தை பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஐ.டி. என்ஜினீயர் காரில் கடத்தல் கோவையில் ஐ.டி. என்ஜினீயர் சஞ்சய் என்பவரிடம் 'கிரைண்டர்' செயலி மூலம் நெல்லையைச் சேர்ந்த ஆத்விக் என்பவர் அறிமுகமானார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சஞ்சய்யை காரில் கடத்திச் சென்றுள்ளார். நகை-பணம் பறிப்பு, 4 பேர் கைது சிறுவாணி சாலையில் வைத்து அவரை தாக்கி, அவரிடமிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்துவிட்டு தப்பியோடினர். இது குறித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆத்விக் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/it-engineer-kidnapped-in-car-jewellery-and-cash-snatched-4-arrested




