திருச்சூர், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சூண்டல் பகுதியை சேர்ந்தவர் நவுஷாத் (வயது 42). இவர் தனது வீட்டில் வைத்து பள்ளி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு டியூ சன் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டியூசன் படிக்க வரும் மாணவிகளிடம் நவுஷாத் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், இதுதொடர்பாக திருச்சூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நவுஷாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/teacher-arrested-for-sexually-assaulting-schoolgirls-in-tucson




