கொழும்பு, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள தயாராகி வரும் இலங்கை அணிக்கு, தொடர் தொடங்குவதற்கு முன்பே பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணியின் முக்கிய பேட்டர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பதும் நிஸங்கா காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குசல் மெண்டிஸ், சமீபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டின் பணிச்சுமையை சமாளிக்க முடியாத நிலை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய தகவல்படி, அவர் தொடரையே தவறவிடும் வாய்ப்பும் உள்ளது. மறுபுறம், பதும் நிஸ்ஸங்காவும் காயத்திலிருந்து மீண்டு வருவதால் முதல் டெஸ்டில் விளையாடுவது சாத்தியமில்லை என கூறப்படுகிறது. இரண்டாவது டெஸ்டில் அவர் திரும்புவாரா என்பதும் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இந்த இரு வீரர்களும் இல்லாதது இலங்கையின் பேட்டிங் ஆர்டருக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/test-against-india-shock-for-the-sri-lankan-team




