தென்காசி, தென்காசி அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள நாகப் பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். வீட்டிற்குள் புகுந்த பாம்பு தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்துள்ள மேலகரம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று காலை நச்சுத்தன்மை கொண்ட நாகப்பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, குற்றாலம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பாம்பு மீட்பு தகவலறிந்த வனத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சமையலறைப் பொருட்களுக்கு இடையே மறைந்திருந்த நாகப் பாம்பை பிரத்யேகக் கருவிகள் மூலம் லாவகமாகப் பிடித்தனர். மீட்கப்பட்ட பாம்பு சுமார் 5 அடி நீளத்தில் இருந்தது. பொதுமக்கள் பாராட்டு பின்னர், பிடிபட்ட நாகப் பாம்பு பாதுகாப்பான பெட்டியில் அடைக்கப்பட்டு, செங்கோட்டை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது. வனத்துறையினரின் இந்த விரைவான மற்றும் துரிதமான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-cobra-that-entered-house-rescued-forest-department-takes-action




