சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார். "பெண்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மிகவும் இழிவான கருத்துகளைத் தெரிவிக்கும் பின்னணி கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. அமைச்சர் கீர்த்தனா ஒருவேளை அது நானாகவே இருந்தாலும், அதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது? ஒரு பெண்ணின் உடை, அவரது தோற்றம் அல்லது அவரது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய விஷயங்களாக நடத்தப்படுகின்றன?" ஆதங்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வைரல் வீடியோவுக்குச் சம்பந்தப்பட்ட மலேசிய பெண் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "வீடியோவைப் பார்த்து அமைச்சர் இப்படி ஒரு டிரஸ் போடலாமா? என்று கேட்டிருக்கிறார்கள். "வீடியோவில் இருப்பது நானல்ல; அவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க?" - கீர்த்தனா ஆதங்கம் அந்த வீடியோவில் இருக்கும் நபர் நான்தான். அமைச்சர் கிடையாது. அந்த வீடியோவிற்குக் கீழ் அநாகரிகமாக கமென்ட்ஸ் பண்ணவர்களாக இருக்கட்டும், ட்ரோல் பண்ணவர்களாக இருக்கட்டும் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அதனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தேன். இந்த வீடியோ வைரலாகி என்ன ஆகப்போகிறதோ என்று பயமாக இருந்தது. சம்பந்தப்பட்ட மலேசிய பெண் விளக்கம் ஆனால் என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது. நான் நாகரிகமாக டிரஸ் அணியவில்லை என்று கமென்ட் செய்திருக்கிறார்கள். அப்படி என்ன நாகரிகமற்று நான் டிரஸ் அணிந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. போலிஸிடம் கம்ப்ளைன்ட் செய்திருக்கிறேன். இந்தியாவில்தான் அந்த வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு இருக்கிறது. இப்போது வரை பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார். "ஏன் நாங்க கோட்-சூட் போடக்கூடாதா? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா?" - கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/thats-me-not-minister-keerthana-malaysian-woman-releases-clarification-video



