சென்னை நடிகை வினோதினி ஸ்பா ஒன்றில் மசாஜ் செய்வதற்காக சென்ற போது அங்கு தனது தாலி செயின் மாயமானதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை வினோதினி. ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘ஆத்தா உன் கோயிலிலே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இவர், திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மாயமான தாலி செயின் இந்த நிலையில், நடிகை வினோதினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்பா ஒன்றில் மசாஜ் செய்வதற்காக கழற்றிய தனது தாலி செயின் மாயமானதாக தெரிவித்துள்ளார். மசாஜ் செய்வதற்கு முன்பாக தனது தாலி செயினை கழற்றி, ஸ்பாவில் இருந்த ஒரு டப்பாவில் வைத்ததாகவும், பின்னர் மசாஜ் முடிந்ததும் வீட்டிற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2 நாட்களுக்கு பிறகு தெரியவந்தது வீட்டிற்கு சென்ற பிறகு சுமார் 2 நாட்கள் கழித்துதான் தனது தாலி செயின் காணாமல் போனதை கவனித்ததாக வினோதினி குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஸ்பா நிர்வாகத்திடம் இதுகுறித்து விசாரித்ததாகவும், ஆனால் அவர்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். போலீசில் புகார் ஸ்பா நிர்வாகத்திடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்காததால், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக நடிகை வினோதினி தெரிவித்துள்ளார். மேலும், ஸ்பாக்களுக்கு செல்லும்போது பெண்கள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நடிகை வினோதினியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/thali-chain-goes-missing-at-spa-actress-vinodhini-files-sensational-complaint




