திருநெல்வேலி, நெல்லையில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு, பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். மருந்து சரக்கு குற்றவாளிகள் திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுடலைகண்ணு (வயது 22), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துகுமார் மகன் மகேஷ்(21) ஆகிய 2 பேர், திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த “மருந்து சரக்கு குற்றவாளிகள்” ஆவர். 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரும் திருநெல்வேலி டவுண் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று (10.9.2026) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/selling-cannabis-in-paddy-2-drug-trafficking-criminals-arrested-under-the-gangster-act



