சென்னை, சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இதனை அறிவித்தது. சென்னையில் இந்தத் தொடர் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். உலகின் முதல் 100 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகள் பலர் இத்தொடரில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தலைவர் மற்றும் இந்திய டென்னிஸ் முன்னாள் நட்சத்திரம் விஜய் அமிர்தராஜ் தெரிவித்தார். பெண்கள் டென்னிஸை ஊக்குவிப்பதற்கும், தமிழகத்தில் அதிகமான சிறுமிகள் டென்னிஸ் விளையாட முன்வருவதற்கும் இந்த சர்வதேசத் தொடர் உதவும் என அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/tennis/start-date-announced-for-the-chennai-open-tennis-tournament




