ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஸ்காட் எட்வர்ட்ஸ் விலகியதைத் தொடர்ந்து, அணியின் ஆல்ரவுண்டரான பாஸ் டி லீடே புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நமீபியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அணியினரிடம் பேசிய அவர், இந்த முடிவு குறித்து பயிற்சியாளர் ரையன் குக்குடன் நீண்ட நாட்களாக ஆலோசித்து வந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த நேரம்தான் சரியானது என்று நான் உணர்கிறேன். கேப்டனாக மட்டுமல்லாமல், ஒரு வீராங்கனையாக அணிக்காக இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன். அதுவே இனி எனது முக்கிய இலக்காக இருக்கும். மேலும், "இது மிகவும் சிறப்பான அணி. இந்த அணியின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இனி வரும் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். என்று ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/scott-edwards-steps-down-as-netherlands-team-captain-2




