உலக தடகளத்தின் மிகக் கடினமான பிரிவாகக் கருதப்படும் 10,000 மீட்டர் நீண்ட தூர ஓட்டத்தில் இந்தியா புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் 10,000 மீட்டர் ஓட்டத்தில், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த குல்வீர் சிங் (28), 10,000 மீட்டர் தூரத்தை 27:49.78 நிமிடங்களில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அந்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இது ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய தடகளத்தின் புதிய திசையைக் காட்டும் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. குல்வீர் சிங் 10,000 மீட்டர் என்பது வெறும் வேகப் போட்டியல்ல. 25 சுற்றுகள் முழுவதும் உடல் வலிமை, மன உறுதி, சரியான திட்டமிடல் மற்றும் இறுதிக்கட்டத்தில் வேகத்தை உயர்த்தும் திறன் ஆகியவை ஒன்றாகச் செயல்பட வேண்டிய சவாலான போட்டி. உலக அளவில் கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பிரிவில் இந்திய வீரர் பதக்கம் வெல்வது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். சமீப ஆண்டுகளில் இந்தியாவில் நீண்ட தூர ஓட்ட வீரர்களுக்கான அறிவியல் பயிற்சி, உயரமான மலைப் பகுதிகளில் பயிற்சி முகாம்கள், சர்வதேச போட்டி அனுபவம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் பலனாகவே குல்வீர் சிங்கின் இந்த வெற்றியை விளையாட்டு வல்லுநர்கள் பார்க்கின்றனர். குல்வீர் சிங் ஒரு வெள்ளிப் பதக்கம் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் ஒரு எண்ணிக்கையை மட்டும் சேர்க்கவில்லை; உலக நீண்ட தூர ஓட்ட அரங்கில் இந்தியாவும் போட்டியிட முடியும் என்ற புதிய நம்பிக்கையையும் விதைத்துள்ளது. குல்வீர் சிங்கின் இந்த வரலாற்றுச் சாதனை, எதிர்கால இந்திய தடகள வீரர்களுக்கு ஒரு ஊக்கப் பாதையாக அமைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://sports.vikatan.com/cwg-2026-gulveer-singh-wins-historic-silver-medal-in-10000m




