சென்னை, 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அறநிலையத்துறை சொத்துகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சொத்துகளை தி.மு.க. ஆட்சி பாதுகாத்தது. எங்களை பார்த்து தூங்கிக் கொண்டிருந்தீர்களா? என்று அமைச்சர் ரமேஷ் கேட்கிறார். நாங்கள் தூக்கத்தைக் கலைத்து முழுமையாக களத்தில் நின்றதால் தான். 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகளை மீட்டிருக்கின்றோம். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். எனவே, கும்பகர்ணத் தூக்கம் கொண்டிருக்கின்ற ஆட்சி, இந்த ஆட்சி என்பதை நான் பதிவு செய்கிறேன். இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற கோபுரங்கள், சமயபுரம் முதற்கொண்டு எடுத்துக்கொண்டால், மு.க.ஸ்டாலின் பெயரை உச்சரிக்கும். தி.மு.க. ஆட்சி இந்த ஆட்சியினர் அதிகாரிகளை மிரட்டுவது. “எடுத்தேன், கவிழ்த்தேன்" என்று பேசுவது மட்டுமே கையில் வைத்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றோம். அதை ஒரு கணம் அவர்கள் திருப்பிப் பார்த்தாலே. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-did-in-5-years-what-should-have-been-done-in-50-years-shekar-babu




