ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் ஆடிப்பூர உற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண திருக்கோலத்தில் அருள்பாலித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருக்கோயிலில் உள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் இந்த உற்சவத்தில், தினமும் வெவ்வேறு திருக்கோலத்தில் மூலவர் மற்றும் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். அவ்வகையில் ஆடிப்பூரம் உற்சவத்தின் 3ம் நாளான இன்று (07.08.2026), மூலவர் அரங்கனாகவும் (ரங்கநாதர்), உற்சவர் ஆண்டாளாகவும், இணைந்து திருக்கல்யாண திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்கள். இந்த சிறப்பு திருக்கோல காட்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெளி ஆண்டாள் சன்னதி இதேபோல் ஸ்ரீரங்கம் ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியிலும் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. தினமும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு ஆரத்தி நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/devotional/srirangam-aadi-pooram-festival-andal-arangan-thirukalyanam-thirikolam




