மும்பை, மராட்டிய மாநிலம் கொலாபா பகுதியை சேர்ந்தவர் புரன்மல் ஷம்புலால் (வயது 30). இவர் இந்திய கடற்படையில் பணியாற்றி வந்தார். இதனிடையே புரன்மல் ஷம்புலாலுக்கு ஒமா என்ற மனைவியும் (வயது 28), 2 குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், புரன்மல் ஷம்புலால் நேற்று தனது மனைவி, 2 குழந்தைகளுக்கு உணவில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் உள்ள அறையில் புரன்மல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரணை இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கடற்படை வீரர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/maharashtra-indian-navy-sailor-kills-wife-children-dies-by-suicide




