புதுடெல்லி, இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, பகுத்தறிவுள்ள மற்றும் இரு தரப்புக்கும் ஏற்புடைய தீர்வைக் காண்பதில் உறுதியளித்த பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், இருதரப்பு உறவுகளை ஒரு நீண்டகாலக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினர். டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திய நிலையில் இது நிகழ்ந்துள்ளது. மேலும், 2025 ஆகஸ்ட் மாதம் தியான்ஜினில் (Tianjin) நடைபெற்ற தங்களது முந்தைய சந்திப்புக்குப் பிறகு இந்தியா-சீனா உறவுகளில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றத்தையும் அவர்கள் வரவேற்றனர். இந்நிலையில் சீன அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- டெல்லி பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தேன். இந்தியா-சீனா இடையிலான உறவுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்தோம். அத்துடன், அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள சீனாவின் பிரிக்ஸ் தலைமைத்துவப் பொறுப்பிற்கான எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தேன். டெல்லி பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தேன். இரு தரப்பினரும் இந்தியா-சீனா உறவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர். அதேவேளையில், அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள சீனாவின் பிரிக்ஸ் தலைமைத்துவப் பொறுப்பிற்கான நல்வாழ்த்துகளையும் சீனத் தரப்பிடம் தெரிவித்தோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/pm-modi-shares-a-post-expressing-warmth-over-his-meeting-with-the-chinese-president




