சென்னை, 'சென்னை லவ் ஸ்டோரி' படத்தில் நடிகை மாற்றப்பட்டதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை லவ் ஸ்டோரி "பேபி" படத்தின் வெற்றிக்கு பிறகு, எழுத்தாளரும் இயக்குனருமான சாய் ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்கேஎன் ஆகியோர் மீண்டும் காதல் திரைப்படமான 'சென்னை லவ் ஸ்டோரி'-ல் இணைந்துள்ளனர். சாய் ராஜேஷ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். ரவி நம்பூரி இயக்கியுள்ள இந்த படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகை மாற்றம் இதற்கிடையில், முதலில் இந்த படத்தில் ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஜோடியாக நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் திட்டம் தாமதமானதை தொடர்ந்து, இறுதியில் கிரண் அப்பாவரம் மற்றும் ஸ்ரீ கவுரி பிரியா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான சாய் ராஜேஷ், நடிகர், நடிகை மாற்றம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- "இந்த கதை முதலில் வேறு ஒரு முன்னணி ஜோடியை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது. ஆனால், தயாரிப்புக்கு முந்தைய பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகுதான் தற்போதைய நடிகர், நடிகையுடன் படம் உருவானது" என்றார். மறைமுக உறுதிப்படுத்தல் சாய் ராஜேஷ் வைஷ்ணவி சைதன்யாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், படப்பிடிப்பு தாமதம் காரணமாகவே அவர் படத்தில் இருந்து விலகியதாக கடந்த சில மாதங்களாக வெளியான தகவல்களை அவரது இந்த கருத்து மறைமுகமாக உறுதிப்படுத்துவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sai-rajesh-explains-why-vaishnavi-chaitanya-was-replaced




