சென்னை, சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் விழித்திரை காப்போம் திட் டம் குறித்த முன் வெளியீட்டு நிகழ்வை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குனர் (பொறுப்பு) லோகநாயகி, அரசு ஆஸ்பத்திரி டீன்கள் சாந்தாராமன், அரவிந்தன், ஹரிகரன், கவிதா உள்ளிட் டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- பருவகால மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதி கரித்தும், குறைந்தும் வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகமாகத்தான் உள்ளது. தேங்கும் மழைநீரை முறையாக அகற்றாத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் இது வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/tamilnadu-election-2026-webstories/rs-10000-fine-for-factories-failing-to-clear-stagnant-water-minister-arunraj-warns




