உடுமலை, வழக்கை வாபஸ் பெறாத ஆத்திரத்தில் மண்வெட்டியால் பெண்ணை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். விபத்தில் உதவியபோது உருவான கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்தது. பஸ்க்காக காத்திருப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட் டியை சேர்ந்தவர் பானுமதி(வயது45). கருத்துவேறுபாடு கார ணமாக கணவரை பிரிந்த இவர், தனது மகளுடன் வசித்து வந்தார். ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக இந்திரா நகர் பஸ் நிறுத்தத்தில் பானுமதி காத்து நின்றார். அப்போது அவரது கண் முன்னே நடந்த ஒரு விபத்தில், ஆனைமலையை சேர்ந்த பிரபாகரன் (39) என்பவர் படுகாயம் அடைந்தார். மனிதநேயத்துடன் அவரை மீட்ட பானுமதி, ஆஸ்பத்திரியில் சேர்த்து அனைத்து உதவிகளையும் செய்தார். இந்த மருத்து வமனை பழக்கம். நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. டீ மாஸ்டர் இதேபோல் பிரபாகரனையும் அவரது மனைவி ஏற்கனவே பிரிந்துவிட்டதால், உடுமலையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த அவர் பானுமதியுடன் கணவன்- மனைவி போல வாழத் தொடங்கினார். அவ்வப்போது பானுமதிக்கு பண உதவியும் செய்து வந்தார். இந்தநிலையில், பானுமதியின் மகளுக்கு திருமணம் முடிந்ததை அடுத்து, பிரபாகரன் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு சென்றுள்ளார். இதற்கு பானு மதியின் மருமகன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கள்ளக்காதலை கைவிடுமாறு பானுமதியை வற்புறுத்தினார். இதனால் பிரபாகரனுடன் பேசுவதை பானுமதி தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு பானுமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் பிரபாகரன் மீது பானுமதி உடுமலை போலீசில் புகார் அளிக்க, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பானுமதி மீது அவர் கடும் கோபத்தில் இருந்தார். இந்தநிலையில் ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன், பானுமதியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் பானுமதி அவரது அழைப்புகளை தவிர்த்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாலப்பம்பட்டியில் உள்ள பானுமதி வீட்டுக்கு பிரபாகரன் வந்தார். அப்போது பானுமதி தனது உறவினர் மயில்சாமியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பிரபாகரன், தன் மீது போட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார். அதற்கு பானுமதி மறுக்கவே. இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து பானுமதியின் தலையில் வெட்டினார். இதனை தடுக்க முயன்ற உறவினர் மயில்சாமியையும் கல்லால் தாக்கினார். இதில் நிலைகுலைந்து மயில்சாமி கீழே விழ, பிரபாகரன் தொடர்ந்து தாக்கியதில் பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல றிந்து வந்த போலீசார் பானுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். காயமடைந்த மயில்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை தொடர் பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-love-affair-that-blossomed-while-helping-in-an-accident-ended-in-tragedy




