சென்னை, சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அப்பிரிவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பரவும் செய்தி பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. உண்மை என்ன? இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி அளித்துள்ள விளக்கத்தில், "சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, சொத்துவரி செலுத்துவோருக்கு மட்டுமே சுய-அறிவிப்பு (Self-Declaration) / உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/property-tax-hike-in-chennai-corporation-clarification-from-the-information-verification-wing




