சென்னை, பிரதமர் மோடியின் வலுவான பொருளாதார கொள்கை: 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவிதம் ஜிடிபி வளர்ச்சியடைந்துள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பொருளாதார மந்தநிலை தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் (2025-2026) வரையிலான முதல் காலாண்டில் 6.5% மட்டுமே ஜிடிபி வளர்ச்சி பெற்றிருந்தது. தொடர்ந்து உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவிய சூழல், தங்கம் விலை உயர்வு, அமெரிக்கா- ஈரான் போர், அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு காரணிகள் போன்றவை நாட்டின் பொருளாதாரத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது ஜிடிபி வளர்ச்சி இந்த நிலையிலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் வலிமையான பொருளாதார கொள்கைகளால் முந்தைய ஆண்டு காலாண்டை காட்டிலும் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவிதம் ஆக உயர்ந்துள்ளது. சான்றாகும் இந்த மகத்தான சாதனை எத்தனை சவால்கள் வந்தாலும் நாட்டின் பொருளாதாரம் வலிமையாகவும், தொடர்ந்து முன்னேறி வருவதை பிரதிபலிக்கிறது. இந்திய பொருளாதாரம் மேலும் வலுப்பெற்று வருவதற்கு இது மகத்தான சான்றாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/gdp-growth-rises-to-7-8-percent-vanathi-srinivasan-on-modi-economic-policy




