அயல்நாட்டில் வியர்வை சிந்தி உழைக்கும் பல என்.ஆர்.ஐ-களின் ஒரே கனவு, 'சொந்த ஊருக்குத் திரும்பி, குடும்பத்தோடு நிம்மதியாக வாழ வேண்டும்' என்பதுதான். ஆனால், ஊருக்குத் திரும்பியதும் அன்றாடச் செலவுகளுக்கு என்ன செய்வது சேமிப்பு வேறு; நிலையான வருமானம் வேறு! வங்கிக் கணக்கில் 50 லட்சம் ரூபாய் டெபாசிட் வைத்திருப்பது வேறு; மாதந்தோறும் தவறாமல் கைக்கு வரும் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரையிலான ஓய்வூதியம் (Pension) என்பது வேறு. வயதான காலத்தில் மருத்துவச் செலவுகள், உணவு, அன்றாடத் தேவைகளுக்கு பிள்ளைகளையோ அல்லது சேமிப்பு கரைவதையோ எதிர்நோக்காமல் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம். இரண்டாம் கட்ட நிலையான வருமானம் (Passive Income) அல்லது பென்ஷன் இல்லையெனில், எவ்வளவு பெரிய சேமிப்பும் சில ஆண்டுகளில் கரைந்துவிடும் அபாயம் உண்டு. மகிழ்ச்சியான ஓய்வுகாலத்தின் ரகசியம் மாதம்தோறும் கையில் நிலையான பணம் வரும்போது ஏற்படும் மன அமைதி, உடலளவில் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, ஆயுளை நீட்டிக்கிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. நிதிச் சுதந்திரம் தரும் இந்தத் தைரியம், முதுமையில் ஏற்படும் மன அழுத்தத்தையும் பயத்தையும் முற்றிலுமாகப் போக்குகிறது. Happy Retirement | NRI Pension ஒரே அடியில் பெரிய நிதி: 'லம்ப்ஸம்' (Lump sum) முதலீட்டின் வலிமை என்.ஆர்.ஐ-களாகிய உங்களிடம் போனஸ் தொகை, நிலம் விற்ற பணம் அல்லது சேமிப்பு எனப் பெரிய அளவிலான தொகை கையிருப்பில் இருக்கும் வாய்ப்பு அதிகம். சிறுகச் சிறுகச் சேமிக்கும் SIP முறையை விட, இத்தகைய பெரிய தொகையை ஒரே முதலீடாக (Lump sum) ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலோ அல்லது தேசிய ஓய்வூதியத் திட்டத்திலோ (NPS) முதலீடு செய்வது கூட்டு வட்டியின் (Compounding) முழு ஆற்றலையும் உங்களுக்கு ஆரம்ப நாளிலிருந்தே பெற்றுத் தரும். உங்கள் கையில் மாத வருமானம் வர எவ்வளவு முதலீடு தேவை? உங்களிடம் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரே தவணையாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்: ஒரே முறை முதலீடு (Lump sum): ரூ.10 லட்சம் சராசரி வருமானம்: ஆண்டிற்கு 12% 15 ஆண்டுகள் கால அளவு: கூட்டு வட்டி அடிப்படையில் இந்த ரூ.10 லட்சம், சுமார் ரூ.55 லட்சமாக உருவாகும்! இந்த ₹55 லட்சம் நிதியை எவ்வாறு பிரிக்கலாம் என்பதற்கான சுருக்கமான விளக்கம்: NPS (அரசின் ஓய்வூதியம்): ₹25 லட்சம் - ₹30 லட்சத்தை NPS அன்னுவிட்டியில் (Annuity) மாற்றினால், ஆயுள் முழுவதும் மாதம் ₹15,000 - ₹18,000 உத்தரவாத ஓய்வூதியம் கிடைக்கும். Mutual Fund SWP: மீதமுள்ள ₹25 லட்சம் - ₹30 லட்சத்தை பாதுகாப்பான ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து, SWP மூலம் மாதம் ₹15,000 - ₹20,000 பெறலாம். (நிதியும் தொடர்ந்து வளரும்!) இந்த NPS + SWP கூட்டணி மூலம் உங்கள் ₹55 லட்சம் நிதியைக் கொண்டு மாதம் ₹30,000 முதல் ₹38,000 வரை ஆயுள் முழுவதும் ஓய்வூதியம் பெற முடியும்! (குறிப்பு: NPS Annuity-யை ஒருமுறை வாங்கிவிட்டால் பிறகு அதனை விற்கவோ மாற்றவோ முடியாது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் SWP-ல் இப்படிப்பட்ட கெடுபிடி எதுவும் இல்லை!) வளைகுடாவிலோ அல்லது ஐரோப்பாவிலோ நீங்கள் வேலை பார்த்தால், உங்கள் கையிலிருக்கும் தொகையைக் கொண்டு இன்றே உங்கள் முதலீட்டைத் தொடங்குங்கள். உங்கள் உழைப்பின் பலன், நீங்கள் ஓய்வெடுக்கும் காலத்தில் உங்களுக்குச் சேவை செய்யட்டும்! லம்சம் முதலீடு மூலம் மாத பென்ஷன் பெறுவது எப்படி? என்ற முதலீட்டு விழிப்புணர்வு ஆன்லைன் நிகழ்ச்சி வரும் சனி (செப். 19, 2026) மதியம் 12:00 மணிக்கு (இந்திய நேரம்) நடைபெறுகிறது. இதில் SWP மூலம் மாத வருமானம் பெறுதல் | மாதாமாதம் கையில் பென்ஷன் பெறும் வழி | வருமானம், வளர்ச்சி & பாதுகாப்பு: இவற்றை பேலன்ஸ் செய்வது எப்படி? போன்ற விஷயங்கள் பேசப்படும். மேலும் விவரங்களுக்கு/முன்பதிவுக்கு: Personal Finance: 5 ஆண்டுகளுக்கு மேல் யோசிக்கத் தெரியாதவர்களா நாம்? ஷேர் மார்கெட்டும் பொறுமையும் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/personal-finance/how-nri-can-get-get-pension-from-lumpsum-investment




