புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் இடைக்கால நடவடிக்கையாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியுள்ளது. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரையும், கட்சியின் மலர் சின்னத்தையும் தற்போதைக்கு எந்த அணியும் பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அணி மற்றும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணிகளும் தங்கள் தரப்பே உண்மையான திரிணாமூல் கட்சி என்று கூறி வருகின்றன. இதையடுத்து இரு அணிகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்கும் வரை பெயர் மற்றும் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இடைத்தேர்தலில் புதிய பெயர், சின்னம் மேற்கு வங்காளத்தின் நந்திகிராம் மற்றும் ரேஜினகர் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இரு அணிகளும் திரிணாமுல் காங்கிரஸ் பெயர் மற்றும் இரட்டை மலர் சின்னத்தில் போட்டியிட முடியாது. இரு அணிகளும் தங்களுக்கு விருப்பமான பெயர்களையும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சுயேச்சை சின்னங்களின் பட்டியலில் இருந்து தலா 3 சின்னங்களையும் தேர்வு செய்து செப்டம்பர் 18-ந் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இரு அணிகளும் தங்களுக்கான தனித்தனி பெயர் மற்றும் சின்னத்தில் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும். இதற்காக தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் 15-வது பிரிவின் கீழ் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/trinamool-congress-party-symbol-frozen-election-commission-takes-action




