ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. அடுத்த மாதத்தில் ரஷ்யாவில் தேர்தல் வேறு வர இருக்கிறது. இந்தப் போரை வைத்து உள்நாட்டில் ரஷ்ய அதிபர் ட்ரம்ப் 'கேம்' ஆடுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் சாடியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. புதின் ஆசை "புதினுக்குப் போர் என்றால் அவ்வளவு ஆசை. அதற்காகத் தான் இப்போது போலியான தேர்தல்கள் மூலம் மீண்டும் ஒரு அரசியல் நாடகத்தை நடத்தியிருக்கிறார். அமைதியைப் பற்றிப் பேசிய 'யாப்லோக்கோ' (Yabloko) கட்சியைக்கூட தேர்தலில் நிற்கவிடாமல் தூக்கியிருக்கிறார் என்றால், அவருக்கு எது முக்கியம் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. புதின்Gold: ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு! மீண்டும் லைம்லைட்டில் தங்கம்; விலை ஏறுவது ஏன்? புதினின் 'படை' பிளான் புதினின் திட்டம் பெரிய குழப்பமானது எதுவும் இல்லை, ரொம்ப எளிதானதுதான். ரஷ்ய மக்கள் எல்லோருமே இந்த போருக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க அவர் நினைக்கிறார். அதனால் தான் தேர்தலில் நிற்க அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சியுமே அமைதிக்கு எதிராக இருக்கிறது. அப்புறம், இந்தப் பேருக்காக நடக்கும் தேர்தல் முடிந்ததும், இந்த ஆண்டு முடிவுக்குள் சில லட்சம் ரஷ்யர்களை வேகவேகமாகப் படையில் சேர்க்கத் திட்டமிடுகிறார். அடுத்த ஆண்டும். போதாது என்று அடுத்த ஆண்டும் அதே போலச் சேர்க்கப் பார்க்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்க்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடக்க, இது தனியாக நடக்கப் போகிறது" என்று பதிவிட்டுள்ளார். புதின் மக்களை வலுகட்டாயமாக ராணுவத்தில் சேர்க்க பிளான் செய்கிறார் என்று ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார் ஜெலன்ஸ்கி. போருக்குப் பின், இந்தப் பிளானைச் செயல்படுத்தினால், எந்தப் பிரச்னையும் இருக்காது என்று புதின் திட்டமிடுவதாக ஜெலன்ஸ்கி கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/zelensky-warns-of-russian-mobilisation-after-september-election




