புதுடெல்லி, இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. இந்திய பந்துவீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 11 ஓவர்களில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி குறைந்த ஸ்கோருக்குள் சுருண்டுவிடும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு அனுபவ வீரர்களான ரஷித் கான் மற்றும் முகமது நபி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். இருவரும் இணைந்து ரன்களை வேகமாக சேர்த்ததால் ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/afghanistan-sets-a-target-of-160-runs-for-the-indian-team




