புதுடெல்லி, இருப்பு குறைவாக உள்ள நிலையில், பண்டிகை கால தேவை அதிகரித்து வருவதால், நாட்டில் மொத்த சர்க்கரை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி யுள்ளது. அடுத்த மூன்று மாதங் களும் விலை உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: “கோலாப்பூரில், கிலோ சர்க்கரையின் மொத்த விலை கடந்த ஒரு மகாராஷ்டிராவின் 100 மாதத்தில் 10.20 சதவீதம் உயர்ந்து 4,716 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள் ளது. குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட எதிர்வரும் பண்டிகை காலத்தில் இனிப்புகளின் பயன்பாடு அதிகரிப்பது வழக்கம். இதனால், சர்க்கரை ஆலைகள் கையிருப்பை படிப்படியாக சந்தைக்கு அனுப்பும் போது, மேலும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வர்த்தகர் கள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/sugar-prices-heading-towards-a-new-highwhat-is-the-reason




