கொச்சி கேரளாவில் அடுத்த 4 நாட்களாக கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. இந்த மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட பகுதிகளில், 64 மி.மீ. முதல் 115 மி.மீ. வரை மழை பெய்ய கூடும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. மழைப்பொழிவு குறைவு கேரளாவில் நடப்பு ஆண்டில் ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மழை குறைவாக பெய்துள்ளது. இதன்படி, 28 சதவீத மழைப்பொழிவு குறைந்துள்ளது என தெரிவித்தது. இதனால், கடந்த 2 மாதங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், மின் நுகர்வும் அதிகரித்து உள்ளது. பல்வேறு இடங்களில் மின் வெட்டும் ஏற்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/heavy-rain-to-lash-kerala-for-next-4-days-imd




