சென்னை, நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காணாமல் போனவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார். இதனிடையே நேபாளத்தில் தமிழர்கள் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதோடு, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்பேரில், நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோரை டெல்லி செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/flood-impact-in-nepal-tamil-nadu-ministers-heading-to-delhi




