தூத்துக்குடி, தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் நேற்று நடந்தது. சமீ பத்தில் த.வெ.க.,வில் இணைந்த தி.மு.க., கவுன்சிலர் ராமர்,அ.தி. மு.க., கவுன்சிலர் மந்திர மூர்த்தி ஆகியோர், 'மாநகராட்சி பகுதியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா திறந்து வைத்த கட்டட கல்வெட்டில், அவரது பெயரை இடம் பெற செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர். மேயர் ஜெகன் பேசுகையில், "தி.மு.க., முன்னாள் சண்முகையா எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கல்வெட்டில், அமைச்சர் மதன் ராஜா பெயரை போட முடியாது. அடுத்தவர் பெயரில் உள்ளதற்கு பெயர் வைக்க அலைகிறீர்கள். 'அதற்கு அப்பா யாரென தெரிந்து கொள்ளுங்கள் கடந்த ஆட்சியில் சி.எஸ். ஆர்., நிதியில் நாங்கள் கட்டிய கட்டடங்களை தற்போதைய அமைச்சர்கள் திறந்து வைக்கின்றனர். என் பெயரை மறைக்க நினைத்தவர்கள் அவர்களாகவே முடிந்துவிடுவார்கள்," என்றார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/know-who-my-father-is-before-you-speak-dmk-mayors-controversial-remarks




