புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி எடுக்கும் வியூகங்கள் குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு கள் எட்டப்பட்டன. வியூக வகுப்பாளர்கள் கூட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நேற்று ஆலோசனை நடத்தியது. இது காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பாளர்கள் கூட்டம் என அழைக்கப்பட்டது. ராகுல் காந்தி இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிற தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ், ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், சசி தரூர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண் டனர். மசோதாக்களை எதிர்க்க. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மழைக்கால கூட்டத்தொடரில் பின்பற்றப்பட வேண்டிய வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. குறிப்பாக தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் பிரதமர், முதல்-மந்திரிகளை பதவி நீக்க கோரும் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டால் அதனை எதிர்த்து எவ்வாறு செயல்படுவது? என்பது பற்றியும், மேற்காசியப்போர், நீட் வினாத்தாள் கசிவு விவகாரங்கள், ராமர் கோவில் நன்கொடை கையாடல் விவகாரங்களில் மத்திய அரசை எதிர்த்து எவ்வாறு களம் ஆடுவது? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டன. இதில் பல முடிவுகளும் எட்டப்பட்டன. கூட்ட முடிவில் பிரமோத் திவாரி, மழைக்கால கூட்டத்தொடரின்போது எழுப்பப்படவுள்ள முக்கியப் பிரச்சினைகள் குறித்த கட்சியின் நிலைப்பாடு பற்றி விவாதித்ததாகத் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/what-is-the-congress-partys-strategy-for-the-monsoon-session-of-parliament




