சபரிமலை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி. மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவிலின் தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, நடையை திறக்கிறார். 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் இன்று மாலை நடை திறக்கப்பட்ட பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. நாளை (17-ந்தேதி) மாதாந்திர பூஜை தொடங்குகிறது. அன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப் பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தெடர்ந்து நெய் அஷ்டாபிஷேகம், உச்ச அபிஷேகம், பூஜை. தீபா தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்படும். முன்பதிவு அவசியம் இந்த பூஜைகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்பதால் மாதாந்திர பூஜையின் போதும், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே மாதாந்திர பூஜையில் பங்கேற்க முடியும். ஆவணி மாத மாதாந்திர பூஜை 21-ந்தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் நிறைவ டைந்ததும் அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/aavani-month-puja-sabarimala-ayyappan-temple-portals-open-today




