நியூயார்க், 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஓபன் காலிறுதியில் 2 அமெரிக்க வீராங்கனைகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். வெற்றி 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனையான எம்மா நவாரோ, அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய நவாரோ, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியைப் பதிவு செய்து காலிறுதிக்கு தகுதி பெற்றார். 4-வது கிராண்ட்ஸ்லாம் இந்த வெற்றியின் மூலம் நவாரோ தனது டென்னிஸ் வாழ்க்கையில் 4-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு 2024 விம்பிள்டன், 2024 அமெரிக்க ஓபன் மற்றும் 2025 ஆஸ்திரேலிய ஓபன் தொடர்களிலும் அவர் காலிறுதியை எட்டியிருந்தார். அமெரிக்க வீராங்கனைகள் மோதல் காலிறுதியில் நவாரோ, சகநாட்டு வீராங்கனையும் 3-ம் நிலை வீராங்கனையுமான ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார். இதன்மூலம் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இரு அமெரிக்க வீராங்கனைகள் நேருக்கு நேர் மோத உள்ளனர். 2015-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸ், தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியிருந்தார். சிர்ஸ்டியாவை வீழ்த்திய பெகுலா முன்னதாக நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா, ருமேனியாவின் 16-ம் நிலை வீராங்கனையான சொரானா சிர்ஸ்டியாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் பெகுலா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/tennis/navarro-pegula-book-first-all-american-us-open-qf-since-2015




