டோக்கியோ, ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹன்ஷோ நகரில் கிழக்கு கடற்கரை பகுதியில் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் - 5 பேர் காயம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் அதிகாலை வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இபாரகி, ஷிபா, சைடமா ஆகிய நகரங்களில் மொத்தம் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் டோக்கியோவில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/earthquake-in-japan-5-injured




