சென்னை, தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 6-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (ஆகஸ்ட் 7) தொடங்கியது. இரங்கல் தீர்மானம் வாசித்த சபாநாயகர் இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும், முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார். பிரபலங்களுக்கு அஞ்சலி அந்த இரங்கல் தீர்மானத்தில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், எழுத்தாளர் புவியரசு, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுருளிவேல், பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி உள்ளிட்டோர் நினைவுகூரப்பட்டு, அவர்களின் மறைவுக்கு சட்டசபை சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மவுன அஞ்சலி செலுத்திய உறுப்பினர்கள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டசபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தி, மறைந்தோருக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து சட்டசபை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று, பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/condolences-offered-in-the-legislative-assembly-to-director-bhagyaraj-singer-s-janaki-and-others




