வயநாடு, எந்தவொரு தனிமனிதனோ, தலைவனோ, சர்வாதிகாரியோ அல்லது எந்தவொரு சக்தியோ இந்திய மக்களின் விருப்பத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மக்களின் குரல் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியது குறித்து வயநாட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பேசியதாவது:- பல காரணங்களுக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மிக முக்கியமான காரணம் என்னவென்றால், அரசியலமைப்பைச் சிதைக்க முயன்றவர்களிடமிருந்தும், மக்களின் குரலை ஒடுக்கவும் நசுக்கவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டவர்களிடமிருந்தும், நம் நாட்டு மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறத் தொடங்கிய நாள் இது என்று நான் நம்புகிறேன். மகாத்மா காந்தி வழியில் இது இந்தியாவின் இளைஞர்களுக்கான வெற்றி என்று நான் கருதுகிறேன். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் எனக்கு மிகுந்த பெருமை உண்டு. தாங்கள் நம்பிய கொள்கைகளுக்காக வெளியே வந்து உறுதியாக நின்ற அவர்கள் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன். மகாத்மா காந்தி நமக்குக் கற்றுக்கொடுத்த அதே வழியில் அவர்கள் இதைச் செய்தார்கள். வன்முறையற்ற முறையில் போராடினார்கள். அவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் (pellet guns) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. தடியடி நடத்தப்பட்டது. அவர்கள் கடுமையான காயங்களுக்கு ஆளானார்கள், ஆனாலும் அவர்கள் பணியவில்லை. மாறாக, அரசாங்கமே அவர்களின் விருப்பத்திற்குப் பணிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது இந்நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால ஆட்சியாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடம். ஜனநாயகம் நீங்கள் மக்களின் விருப்பத்திற்குச் செவிசாய்க்க வேண்டும். இது ஒரு ஜனநாயகம். மக்களின் விருப்பமே முதன்மையானது. அதற்கு மேலாக எதுவும் இல்லை. எந்தவொரு தனிமனிதனோ, தலைவனோ, சர்வாதிகாரியோ அல்லது எந்தவொரு சக்தியோ இந்திய மக்களின் விருப்பத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. இன்று, அதை நம் மாணவர்களும் இளைஞர்களும் நிரூபித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியாகிய நாங்கள் அவர்களுக்கு மிக வலுவான முறையில் ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறை சீர்திருத்தங்கள் குறித்த பிரச்சினையை ராகுல் காந்தி நீண்ட காலமாகவே பேசி வருகிறார். அவர் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை எழுப்பி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். அவரை நான் பாராட்ட விரும்புகிறேன். இளைஞர் காங்கிரஸ் ஏனெனில், அவர் இந்தப் பிரச்சினையை எழுப்பி, மாணவர்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி, மாணவர் உரிமைகள் மற்றும் கல்வி முறை சீர்திருத்தங்களுக்காக நாடு முழுவதும் ஒரு இயக்கத்தை உருவாக்கவும் கட்சியில் உள்ள எங்களையும், என்.எஸ்.யு.ஐ (NSUI) மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினரையும் ஊக்குவித்தார். இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று நான் நம்புகிறேன். இந்தச் செய்தியைக் கேட்டபோது நான் சற்று உணர்ச்சிவசப்பட்டேன். ஏனென்றால், கடந்த 10 அல்லது 12 ஆண்டுகளில் பலமுறை நான் என்னையே கேட்டுக்கொண்டிருக்கிறேன். நம் இளைஞர்கள் எப்போது விழித்தெழுவார்கள்? என்று. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு முழு கல்வி அமைப்பையும், ஒவ்வொரு பதவியையும், ஒவ்வொரு துணைவேந்தர் பதவியையும் ஆக்கிரமித்து வருகிறது. நம் முன்னோர்களின் கொள்கைகள் சிதைக்கப்படுகின்றன. இளைஞர்கள் மீதும், எதிர்ப்புக் குரல் எழுப்பும் எவர் மீதும் வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனென்றால் நம் நாட்டின் இளைஞர்கள் தங்கள் குரலைப் பதிவு செய்துள்ளனர். இனி யாரும் அவர்களின் குரலை ஒடுக்கத் துணியமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/no-one-will-dare-to-suppress-the-voices-of-the-youth-anymore-priyanka-gandhi




