சென்னை, பெங்காலி திரையுலகைச் சேர்ந்த நடிகை மோக்ஷா, தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார், தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த மோக்ஷா பெங்காலி திரையுலகைச் சேர்ந்த நடிகை மோக்ஷா, தமிழில் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் ‘மீனு மிஸ்’ என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அவருக்கான ரசிகர் பட்டாளமும் உருவாகத் தொடங்கியுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ள மோக்ஷா, தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். “தமிழ் சினிமா மிகவும் பிடித்திருக்கிறது” இதுகுறித்து நடிகை மோக்ஷா கூறுகையில், “எனக்கு தமிழ் சினிமா மிகவும் பிடித்திருக்கிறது. ‘கட்டா குஸ்தி 2’ படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும், என் மீதான அன்பும் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கலக்க ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தமிழ் ரசிகர்கள் அளித்த வரவேற்பால் உற்சாகமடைந்துள்ள மோக்ஷா, இனி வரும் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/desire-to-act-in-tamil-cinema-gatta-kusthi-2-actress-moksha-expresses-her-wish




