நீட் வினாத்தாள் கசிவிற்காக டெல்லியில் மாணவர்கள் நடத்திய பேரணியில் பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தை எஃப்.ஐ.ஆராக பதிவு செய்யுமாறு இன்று டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்டார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம், "இன்று ராகுல் காந்தி நடத்தும் தர்ணா போராட்டம் மாணவர்களுக்காகவோ அல்லது நீதிக்காகவோ நடத்தப்படுவது அல்ல. அது காங்கிரஸ் கட்சியின் அரசியல் விரக்தியையும், ராகுல் காந்தியின் 'புகழ் வெளிச்சத்திற்காக ஏங்கும்' போக்கையும்தான் காட்டுகிறது. காவல் நிலையத்தில் ராகுல் காந்திசர்க்கரை விலை ஏன் உயர்ந்தது? மத்திய அரசு சொன்ன காரணங்கள் இதோ! விலை உயர்வை தடுக்க 5 நடவடிக்கைகள் இன்று 'வந்தே மாதரம்' பாடலுக்கு நேர்ந்த அவமதிப்பு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அனைத்துத் தரப்பிலிருந்தும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தேசியப் பாடலை அவமதித்தது குறித்து காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் பதில் கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தேசியக்கொடி பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டுவதைப் பார்க்க முடிகிறது. தங்களின் இந்தத் தேசவிரோத முகத்தை மறைக்கவும், இந்த மிகப்பெரிய அசிங்கத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவுமே ராகுல் காந்தி அவசர அவசரமாகக் காவல் நிலையத்தில் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். ராகுல் காந்தி 'இதை' உணர வேண்டும்! நாடு என்பது ஒரு குடும்பத்தின் 'பிடிவாத குணத்திலோ' அல்லது கேமராக்கள் மீதான அவர்களின் ஆசையிலோ இயங்கவில்லை. மாறாக அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை நடைமுறைகளின்படியே இயங்குகிறது என்பதை பாரதிய ஜனதா கட்சி தெளிவுபடுத்த விரும்புகிறது. மக்கள் தனது ஹிட் அண்ட் ரன் அணுகுமுறையையும், அரசியல் போலித்தனத்தையும் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும்." அடுத்தடுத்து பண்டிகை சீசன்; தங்க நகை வாங்க பிளான் இருக்கிறதா? 'இதை' நோட் செய்து வாங்கினால் லாபம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/nadda-accuses-rahul-gandhi-of-political-drama-over-neet-protest




