லஞ்சம் வாங்குவது குறித்து நேற்று இரவு (செப்டம்பர் 4) அமைச்சர் கீர்த்தனா, "லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும். லஞ்சம் குறித்து தெரிந்தால் Whats App Number (+91 70103 27687) எண்ணில் புகார் தெரிவியுங்கள். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என்று பதிவிட்டிருந்தார். CPIM பேச்சுKN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" - கனிமொழி இந்தப் பதிவிற்கு பதில் தரும் விதமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், "மாற்றம் வரும் வரை நடவடிக்கை உறுதி: அமைச்சர் கீர்த்தனா. தொழில்துறை அமைச்சர் அவர்களே தொழில் லைசன்ஸ் பெற தொழிலாளர்களோ பொதுமக்களோ லஞ்சம் தருவதில்லை. முதலாளிகளே தருகின்றனர் லஞ்சம் கொடுப்பவர் குற்றம் புரிந்தவர் என்கிற முறையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? இதுவரை தவறு செய்த பெருமுதலாளிகள் நம் நாட்டில் தண்டிக்கப்படவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/cpim-questions-keerthanas-stand-on-bribery




